என்ன சொல்லி அனுப்புவேன்..?

Filed under: , by: மஹாராஜா



விரும்பும் போது விலகி சென்ற அவள்..
இன்று விலகும் போது விரும்பி வந்து நிற்கிறாள்..
நான் என்ன செய்ய?
நீ விட்டுவிட்டு சென்ற நம் காதலும், அதன் நினைவுகளும்
என்னையும் அறியாமல் பாதுகாத்து வருவது தான் தெரியுமா?
காற்றை மட்டும் சுவாசித்த நான் இன்று உன்னையும் சேர்த்து அல்லவா
சுவாசிக்கிறேன்.. அதுவாது தெரியுமா?
நாம் பழகியதற்கு சாட்சியாக இதோ இந்த காதல் கடிதமும்
இருப்பது உனக்கு பிடிக்க வில்லையா?
இதோ..இன்று மட்டும் வந்து என் காதலை கேட்கிறாயே இது
எந்த விதத்தில் நியாயம்?
பதில் சொல் அன்பே..
நான் இப்படியே இருந்துவிடுகிறேன்,..மீண்டும் வேண்டாம் ஒரு காதல் வலி.

......

13 பின்னூட்டங்கள்..!:

On June 19, 2008 at 8:49 PM , rahini said...

enna solli naan elutha
intha kavithaiku karuthu
arumai arumai
anpudan
rahini

 
On June 20, 2008 at 8:27 AM , மஹாராஜா said...

வாருங்கள் ராகினி..
முதல் வருகை என்று நினைக்கிறேன்.. மிக்க நன்றி..
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..

 
On June 20, 2008 at 8:28 AM , மஹாராஜா said...

அடிக்கடி வந்து போங்க.. நீங்க கொடுக்குற கமெண்ட் தான்
கொஞ்சம் பூஸ்ட் ஆக இருக்கும்...
நன்றிகளுடன்.. மஹா..

 
On June 20, 2008 at 1:21 PM , தாமரை கன்னங்கள் said...

Very Good Experence.. i like very much dear friend...
i saw ur name some of other places also... Ok anyhow God Is Great.. Mail me thirukumar@gctindia.com

love,
Thirukumar K

 
On June 21, 2008 at 11:42 PM , rahini said...

முதல் வருகை தான் கவிதைக்கு பாராட்டு சொல்ல வார்த்தைகள்வரவில்லை
வாழ்த்துகள் தேழரே

 
On June 22, 2008 at 9:10 AM , கானா பிரபா said...

கலக்கல் மஹாராஜா, அப்படியே உங்கள் இடுகையை தமிழ்மணத்திலும் சேர்த்துவிடுங்களேன்.

 
On June 23, 2008 at 8:20 AM , மஹாராஜா said...

வாங்க திருக்குமார்.. நலமா.?
ரொம்ப நன்றிங்க... அடிக்கடி வந்து போங்க..

 
On June 23, 2008 at 8:21 AM , மஹாராஜா said...

என் பெயர எங்கங்க பார்த்தீங்க..? ஐயோ.. !
பயமா இருக்கே.. கொஞ்சம் தெளிவா சொல்லுங்க திரு..

 
On June 23, 2008 at 8:23 AM , மஹாராஜா said...

ரொம்ப நன்றிங்க.. ராகினி...
உங்க கவிதைகளையும் படித்து இருக்கிறேன்..
மிகவும் அருமையா எழுதுறீங்க.. உங்கள போல ஆகுமா?
நீங்க எல்லாம் கிரேட் ............ நாம எதோ சும்மா பொழுது போகலைனு கவிஜை
எல்லாம் எழுதுறோம்.... என்ன நான் சொல்றது..?

 
On June 23, 2008 at 8:25 AM , மஹாராஜா said...

ஐயோ... கானா அண்ணா.. வணக்கம்..
முதல நீங்க கமெண்ட் கொடுத்ததுக்கு மிக்க நன்றிங்க..
நீங்க எல்லாம் மிக பெரிய ஆளுங்க..
ரொம்ப நன்றிங்க அண்ணா.

தமிழ்மணம் ல நான் ஏற்கனவே சேர்த்துட்டேன்.. ஆனா அங்க காட்ட மாட்டுது.
என்ன பண்ணுறது.. பிளீஸ்.. ஹெல்ப் மீ..

 
On June 28, 2008 at 9:12 PM , கானா பிரபா said...

மஹாராஜா

உங்க டெம்ப்ளேட்டில் சேர்த்த தமிழ்மணப் பட்டியை ஒருமுறை சரி பாருங்க. அல்லது தமிழ்மண உதவிப்பக்கத்துக்கு ஒரு மெயில் போடுங்க சீக்கிரம் ;-)

 
On June 30, 2008 at 7:18 PM , மஹாராஜா said...

ரொம்ப நன்றிங்க அண்ணா... இப்போவே அனுப்பிடுறேன்..
அப்படி கிடைக்கலனா.. உங்களுக்கு என் டெம்ப்ளேட் - ஐ மெயில் பண்ணுறேன்..
நீங்க கொஞ்சம் சேர்த்து கொடுக்க முடியுமா?

 
On July 3, 2008 at 3:27 PM , Unknown said...

hey elarum ungala pathi evalvu soli irukanga... na enna solrathu.. i think elarume tamil rasigarhal... ok anyway unga ella kavithikum na rasigai tats all i say...