தொலைத்து விட்டேன்..என்னை..

Filed under: , by: மஹாராஜா



நித்தம் நித்தம் ஒரு கவிதை எழுதி..
அதில் நினைவெல்லாம் உன்னை சுமந்து ,
காலை சூரியன் கண்திறக்கும் வரை
என் பாவை உனக்கான கவிதை இது..
மீண்டும் உன்னை சந்திப்பதற்கான
ஆசையில் நான் அவசரமாக எழுதிய கவிதை
கூட என்னை பார்த்து சிரிக்கிறது..
கவிதையை பெறும் நீ காதல் வயப்பட்டு
கண்ணாலேயே சிரிப்பாயா..? இல்லை..
மௌனத்தாலேயே கொல்லுவாயா..?
இல்லை.. வேண்டாம் என்று சொல்லி..
நீயே படித்து சொல் என்று என்னிடம் கொஞ்சி
என் மேல் முகம் புதைத்து சிரிப்பாயா..?
இல்லை.. உன் கவிதை பிடித்து இருக்கிறது..
உன்னை பிடிக்கவில்லை என்று சொல்வாயா...?
உனக்கான கவிதை எழுதி முடிக்கையில்..
அங்கு என்னையே நான் தொலைத்து இருந்தேன்,,.
கவிதை எழுதும் போதே உன்னை பற்றியான
சிந்தனைகளை பார்த்தாயா..
நான் காணும் கனவில் கூட உன்னை பற்றியான
நினைவுகள் தான் அன்பே....
மீண்டும் ஒருமுறை சொல்லவேண்டுமா என்ன.?
எந்தன் நிலை பற்றி..? நீயே சொல்....

."."."."."."."."."."."

14 பின்னூட்டங்கள்..!:

On June 29, 2008 at 11:03 AM , PK said...

என்னங்க உங்களுக்கு காதல் தோல்வியா??
இவளோ அழகா கவிதை எழுதுறீங்க.. இதெல்லாம் காட்டுங்க.. ஓடோடி வந்துடுவாங்க!

புனித்
PS: தவறாக ஏதேனும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.. :)

 
On June 29, 2008 at 7:57 PM , ஸ்ரீ said...

இல்லை.. வேண்டாம் என்று சொல்லி..
நீயே படித்து சொல் என்று என்னிடம் கொஞ்சி
என் மேல் முகம் புதைத்து சிரிப்பாயா..?


Idhu nalla irukunga :)

 
On June 29, 2008 at 7:58 PM , ஸ்ரீ said...

இல்லை.. வேண்டாம் என்று சொல்லி..
நீயே படித்து சொல் என்று என்னிடம் கொஞ்சி
என் மேல் முகம் புதைத்து சிரிப்பாயா..?


Idhu nalla irukunga :)

 
On June 30, 2008 at 7:22 PM , மஹாராஜா said...

வாருங்கள் புனித்.. நலமா?
வருகைக்கு மிக்க நன்றி,.. அடிக்கடி வந்து போங்க..
நன்றி

தோழமையுடன்..
மஹாராஜா.க

 
On June 30, 2008 at 7:27 PM , மஹாராஜா said...

ஐயோ.. காதல் தோல்வி யா..? அது எல்லாம் இல்லை...
என்றும் காதல் தோற்காது... காதலன் அல்லது காதலி தான் தோல்வி அடைவார்கள்..
என்னங்க நான் சொல்றது,.. நீங்க சொன்னது ஒரு விதத்தில் உண்மைதான்..


அதன் சொல்லிடீங்க.. அப்பறம் என்ன? சரி போங்க. மன்னிச்சு விட்டுடுறேன்..
சும்மா சொன்னேன்.. அது எல்லாம் ஒன்னும் இல்ல... அடிக்கடி வந்து போங்க.. புனித்..
உங்க கதை எல்லாம் படித்தேன்.. நன்றாக இருந்தது..

 
On June 30, 2008 at 7:30 PM , மஹாராஜா said...

எனது காதல் இளவரசு (அண்ணா) ஸ்ரீ அவர்களுக்கு வணக்கம்...
நலமா அண்ணா? முதலில் இந்த சிறுவனின் கவிதை டைரியில் வந்து கமெண்ட் கொடுத்ததற்கு மிக்க நன்றிங்க. அண்ணா.. நீங்க வந்தது எனக்கு ஒரு மிக பெரிய சந்தோஷமாக இருக்கிறது.. ரொம்ப நன்றிங்க ஸ்ரீ..
அடிக்கடி வந்து போங்க..

 
On June 30, 2008 at 7:31 PM , மஹாராஜா said...

எனக்காக இரண்டு கமெண்ட் போட்ட அண்ணா ஸ்ரீ அவர்களுக்கு மிக்க நன்றி,.


[:P]

 
On July 5, 2008 at 7:22 PM , rahini said...

kaathal thooliviyaa?
VEENDAAM intha kodumai
waalka kaathal.

 
On August 7, 2008 at 10:04 PM , FunScribbler said...

கவிதை நல்லா இருக்கே!:)

//இல்லை.. வேண்டாம் என்று சொல்லி..
நீயே படித்து சொல் என்று என்னிடம் கொஞ்சி
என் மேல் முகம் புதைத்து சிரிப்பாயா..?//

ரசிக்க வைத்த வரிகள்!

 
On August 8, 2008 at 8:02 PM , மஹாராஜா said...

என்னங்க ஆச்சு.. ராகினி..?
என் இந்த பயம்..

 
On August 8, 2008 at 8:03 PM , மஹாராஜா said...

வாங்க தமிழ்மாங்கனி.
உங்கள் பெயரும் கூட அழகாக இருக்கிறது..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
முதல் வருகை என்று நினைக்கிறேன்..
அடிக்கடி வந்து போங்க..
என்றும் நன்றிகளுடன்...

மஹாராஜா.க.

 
On October 8, 2008 at 1:04 PM , Anonymous said...

nice...

 
On October 8, 2008 at 1:05 PM , Anonymous said...

nice...

 
On October 9, 2008 at 12:43 PM , Anonymous said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குது !!!!