மின்சார பார்வை...

Filed under: , , by: மஹாராஜா

ஒவ்வொரு நாளும் உன்னுடைய வீட்டை
கடந்து செல்லும் போது உனது மின் பார்வையில்
இருந்து மீளாமல் செல்ல முடியவில்லை..

**

ஊரெல்லாம் மின்சார தட்டுப்பாடு...
இவளின் கண்களில் மட்டும் எப்படி
இவ்வளவு பவர்..?

**

உனது கடைக்கண் பார்வை பட்டு எரி நட்சத்திரமாய்
கீழே விழும் என்னை ஒரு முத்தம் கொடுத்து
எழுப்ப கூடாதா..?

**

ஐன்ஸ்டீன் வாழும் காலம் நீ இல்லை...
இல்லை என்றால் மின்சாரம் கண்டுபிடிக்காமல்
போய் இருக்க கூடும்...

**

ஒரு கண்களால் என்னை பார்க்கும் போதே
இப்படி ஆகின்றேனே.. இரண்டு கண்ணால் பார்த்தால்..?

**

நீ பேசி கேட்டதை விட..உன் கண்கள் பேசி
பார்த்ததே அதிகம் எனக்கு...

**

குறிப்பு...:

நாமளும் மத்தவங்க போல சும்மா இருந்துடலாம் என்று நினைச்சா ரசிகர்கள் தொல்லை தாங்க முடியவில்லை.... இங்க பதிவர் வட்டத்துல நிறைய பேரு ஒளிஞ்சிகிட்டு இருக்காங்க.. அவங்க எல்லாரும் யாருன்னு நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்ல... உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன்...

4 பின்னூட்டங்கள்..!:

On September 30, 2008 at 5:03 PM , Unknown said...

//ஊரெல்லாம் மின்சார தட்டுப்பாடு...
இவளின் கண்களில் மட்டும் எப்படி
இவ்வளவு பவர்..?//

சீக்கிரம் ஆற்காடு கிட்ட சொல்லுங்க அண்ணா..!! ;))

 
On September 30, 2008 at 5:04 PM , Unknown said...

//உனது கடைக்கண் பார்வை பட்டு எரி நட்சத்திரமாய்
கீழே விழும் என்னை ஒரு முத்தம் கொடுத்து
எழுப்ப கூடாதா..?//

ஏன் தண்ணித் தெளிச்சு எழுப்பக்கூடாதா?? ;))

 
On September 30, 2008 at 5:05 PM , Unknown said...

//நீ பேசி கேட்டதை விட..உன் கண்கள் பேசி
பார்த்ததே அதிகம் எனக்கு...//

நல்லாருக்கு..!! :))

 
On September 30, 2008 at 5:08 PM , Unknown said...

//தினமும் என்னை கவனி. //

இது உங்களுக்கா?? இல்ல உங்க ப்ளாகுக்கா?? ;))