நீ கோலமிட்டு முடிக்கையில்..

Filed under: , by: மஹாராஜா



பாருங்கள் இவளை...! எவ்வளவு அழகாக
இடம் மாறி மாறி கோலம் போடுகிறாள் என்று..!
இதை எல்லாம் விட்டு விட்டு எதை எதையோ
ஒளிபரப்பு செய்கிறார்கள்....!

*

நீ கோலமிட்டு முடிக்கையில்.. அதில் உள்ள
பூக்கள் எல்லாம் ஏனோ தெரியவில்லை..
உயிர் பெற்று விடுகிறது..

*

அதிகாலை சோம்பேறி-யாகிய நான்
நீ கோலமிட வருகையில் உனது
காவலனாய் நான்... எனக்கே தெரியாமல்..!

*

நீ கோலமிடும் போது வேடிக்கை பார்க்கும்
சிறு குழந்தைகளுக்கு நடுவில் நானும்..
உனது கோலமிடும் அழகை ரசித்து..!

*

உனது வீட்டு பக்கமாய் செல்கையில்..
உன்னை பார்க்காத துக்கத்தை..உனது
கோலம் சிறிது ஆற்றிவிடுகிறது.

*

4 பின்னூட்டங்கள்..!:

On August 14, 2008 at 9:56 PM , Anonymous said...

அடடே என்ன ராஜா டைரி புது கவர் போட்டிருக்கீங்க போல அழகா இருக்குங்க. அட்டகாசம். நீங்க நடத்துங்க ராசா.

 
On August 15, 2008 at 11:40 AM , மஹாராஜா said...

வாங்க ஸ்ரீ...
நலமா..? ரொம்ப நன்றிங்க.. எதோ உங்க புண்ணியத்துல சும்மா மாத்தி பார்த்தேன்..
நீங்க நல்லா இருக்குன்னு சொல்லிடீங்க.. இத விட வேற எனக்கு என்ன வேணும்..?
ரொம்ப நன்றிங்க பிரதர்..

உங்கள விடவா நாங்க நடத்துறோம்..?

 
On August 19, 2008 at 10:52 PM , ராகவன் பாண்டியன் said...

Sema..................!

 
On August 27, 2008 at 12:27 PM , மஹாராஜா said...

செம...? என்ன நண்பா.. பாதியிலேயே நிக்கிறீங்க..
முழுசா சொல்லிடுங்க...


இருந்தாலும் உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

என்றும் தோழமையுடன்
மஹா..