சற்று முன் கிடைத்த தகவல் படி.!

Filed under: , , by: மஹாராஜா



சற்று முன் கிடைத்த தகவல் படி
வானிலை அறிக்கை நிலை மாறிவிட்டதாம்.
மழை வராது என்று உறுதி செய்து
கன மழை பெய்யவைத்து விட்டாயே..
உன்னை யார் கோப பட சொன்னது..?



மழை
வராத நேரத்தில் எல்லாம்
குடை பிடிக்க நேரிடுகிறது.எனக்கு
நீ இருக்கும் தைரியத்தில்...




மழைநீர் சேகரிப்பு மையம் அதிகரித்து
விட்டதாம்.. நீ மழையில் நனைவதால்..




நீ மழையில் நனைவதை பார்த்துவிட்டு
அனுமதி பெறாத மழை துளிகள் எல்லாம்
விடுபட்டு வந்து உயிர் இழக்கிறது உன்னிடம்..
காரணமே தெரியாமல்..




உன்னை பார்ப்பதற்கு முட்டி மோதி கொண்டு
கார்மேகங்கள் வருவதனால் தான்
இடி உருவாகின்றதோ..?

*

6 பின்னூட்டங்கள்..!:

On August 26, 2008 at 10:33 PM , ராகவன் பாண்டியன் said...

மழை அடிச்சு ஊத்துது போல!.....கலக்குறீங்க!

 
On August 27, 2008 at 9:49 AM , ஜியா said...

அருமையான கவிகள் :))

//மழைநீர் சேகரிப்பு மையம் அதிகரித்து
விட்டதாம்.. நீ மழையில் நனைவதால்..//

இந்த கவிதை அசத்தல்...

ப்ளாக் டெம்ப்ளேட் எங்க இருந்து புடிச்சீங்க?? அட்டகாசமா இருக்குது :))

 
On August 27, 2008 at 12:16 PM , மஹாராஜா said...

வாங்க ராகவன்.. நலமா..?
ஊரில் மழை என்று ஒருத்தவங்க சொன்னாங்க..
அதான் சும்மா முயற்சி செய்து பார்த்தேன்...
நீங்க சொல்லிட்டீங்க ல. அப்பறம் என்ன..
கலக்கிடலாம்...

வருகைக்கு மிக்க நன்றி,..
அடிக்கடி வந்து செல்லுங்கள்..

என்றும் தோழமையுடன்..
மஹா......

 
On August 27, 2008 at 12:18 PM , மஹாராஜா said...

வாங்க ஜி..
எப்படி இருக்குறீங்க.. நலமா..?

ரொம்ப நன்றிங்க.. ஜி..

பெரியவங்க நீங்க சொல்லிடீங்கள...
அப்பறம் என்ன அசத்திடுவோம்..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கனா..

என்றும் தோழமையுடன்..
மஹா.

 
On August 27, 2008 at 12:20 PM , மஹாராஜா said...

//ப்ளாக் டெம்ப்ளேட் எங்க இருந்து புடிச்சீங்க??//

வண்டலூர் ஜூ - ல நின்னுகிட்டு இருந்தது..
அதன் புடிச்சிட்டு வந்து போட்டுட்டேன்..
ஹ..ஹா .. (சும்மா சொன்னேன்..)..

அட்டகாசமா இருக்குது :))

ரொம்ப நன்றிக ஜி..

அடிக்கடி வந்து போங்க..

என்றும் தோழமையுடன்..
மஹா..

 
On September 3, 2008 at 6:56 PM , Anonymous said...

Padangalum adhuku ertha madhiri kavidaigalum sathal raaja

Vaazhthukkal :)

Neraya ezhudhunga