சந்தித்த வேளையில்

Filed under: , by: மஹாராஜா

அன்று நடந்த சந்திப்பிற்கு பின்பு ,

அந்த ஒரு இரவில் நானும் நீயும்
ஒருவரை ஒருவர் செல்லமாய்
நீ என்னை " ச்சீ.. போடா" என்றும் ,
நான் உன்னை "போடி..லூசு" என்றும்
திட்டி கொண்ட காலங்கள் இன்றும் என் நினைவில்.!

இதோ இன்றும் நினைவில் இருக்கிறது,
அன்று நான் தந்த முத்தத்திற்கு , நீ
பதிலேதும் சொல்லாமல் அமைதியாய்
வெட்கப்பட்டு சென்றதும், நானும் உன்னை
பார்க்க முடியாமல் அந்த நொடியில் ,
பார்வை இழந்து நின்றதும்..இன்றும் என் நினைவில்..!

பகல் நேரத்து நிலா எப்படி யாருக்கும் தெரியாமல்
போகிறதோ அதே போல் தான் நானு போகிறேன்..
உன் நினைவுக்கு பிறகு.. ஒரு காதல் பிம்பமாய்..!

நினைவுகள் என்பது நினைப்பது அல்ல...
பல மைல் தூரம் கடந்து நீயும் நானும்
பரிமாறி கொள்ளும் ஒரு ஆழ்ந்த உணர்வு..!
பரிச்சயமாய் நீ எனக்குதான் என்று தெரிந்தும் ,
பரிதவித்து தான் போகிறேன் ஒவ்வொரு நொடியும்..!

0 பின்னூட்டங்கள்..!: