திமிர் பிடித்த காதல்

Filed under: , , , , by: மஹாராஜா

*

சொல்லுவதற்க்காக நான் சென்ற
ஒவ்வொரு நாட்களும்
நீ என்னை கொல்லுவதற்காக (உன் பார்வையால்)
வந்தாய் என்பது ஏன் எனக்கு அப்போது
தெரியாமல் போய்விட்டது..?

*

பல நாட்களுக்கு பிறகு நமது
காதல் கடிதத்தை படிக்கும் போது
சிறு காயம் ஏற்படுத்திவிட்டது..ஒன்றும் இல்லை..
மனதின் வலியில் கொதித்து கொண்டு இருந்த
கண்ணீர் துளி ஒன்று கரம் தொட்டு
சிரித்துவிட்டு சென்றது..

*

இருமுறை காதல் கொள்ளும்
தோழமைகளே.. உங்களுக்கு
மட்டும் எப்படி முடிகிறது..?
கடவுள் இரு மனசையாய்
கொடுத்துள்ளான்..?

*

வரம் ஒன்று கேட்க வேண்டும் என்றால்
இரவு நேரத்தில் மட்டும் எனது உயிரை
எடுத்துகொண்டு பகலில் கொடுத்துவிடு
இறைவனே.? இனியும் வேண்டாம்
எனது செத்து பிழைக்கும் விளையாட்டு
இரவில்..

*

3 பின்னூட்டங்கள்..!:

On January 8, 2009 at 2:47 PM , Anonymous said...

கொள்வதற்காக shoud be கொல்வதற்காக?

 
On January 16, 2009 at 9:57 PM , rahini said...

kaatahl enraale thimirthane

 
On March 1, 2009 at 9:54 AM , Divya said...

வலிகளை பிரதிபலிக்கும் வரிகள்.....:((